search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வோடபோன் இந்தியா"

    ஐடியா செல்லுலார் நிறுவனம் தனது பயனர்களுக்கு மூன்று புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. இவை தினமும் 1.5 ஜி.பி. டேட்டா வழங்குகிறது. #Idea #Offers



    இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமாக உருவெடுத்து இருக்கும் வோடபோன் ஐடியா லிமிட்டெட் வோடபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லுலார் நிறுவனங்கள் புதிய சலுகைகளை அறிவித்து வருகின்றன.

    அந்த வகையில் ஐடியா செல்லுலார் மூன்று புதிய சலுகைகளை ரூ.209, ரூ.479 மற்றும் ரூ.529 விலையில் அறிவித்துள்ளது. மூன்று புதிய சலுகைகளும் பயனர்களுக்கு தினமும் 1.5 ஜி.பி. டேட்டா வழங்குகிறது. முன்னதாக வோடபோன் இந்தியா இதே விலையில் மூன்று சலுகைகளை அறிவித்தது.

    ஐடியா செல்லுலார் அறிவித்து இருக்கும் புதிய சலுகைகள் நாட்டின் அனைத்து டெலிகாம் வட்டாரங்களிலும் அறிவிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. ரூ.209 சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.



    ரூ.479 சலுகையிலும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இறுதியில் ரூ.529 சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 90 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

    ஐடியா அறிவித்து இருக்கும் சலுகைகளில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் அளவு கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. அதன்படி பயனர்கள் தினமும் 250 நிமிடங்களும், அதன் பின் மேற்கொள்ளப்படும் வாய்ஸ் கால் கட்டணம் நொடிக்கு 1 பைசா வீதம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 

    வாரத்திற்கு 1000 நிமிடங்கள் வரை வாய்ஸ் கால் மேற்கொள்ள முடியும். ஐடியாவின் மூன்று புதிய சலுகைகளிலும் வாய்ஸ் கால் அளவு கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. வாய்ஸ் கால் போன்றே நிர்ணயிக்கப்பட்ட டேட்டா அளவு பயன்படுத்தியதும், கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
    இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களான வோடபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லுலார் இணைவது குறித்த முக்கிய அறிவிப்பு நாளை வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



    வோடபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லுலார் நிறுவனங்கள் இணைவதற்கான அனுமதியை மத்திய டெலிகாம் துறை நாளை வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இருநிறுவனங்கள் இணைப்பு அனுமதி வழங்கப்படும் பட்சத்தில் வோடபோன் ஐடியா லிமிட்டெட் என்ற பெயரில் இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமாக உருவெடுக்கும். 

    மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையம் வோடபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லுலார் இணைவதற்கான அனுமதியை அதிகாரப்பூர்வ சான்றிதழ் மூலம் நாளை வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஐடியா மற்றும் வோடபோன் நிறுவனங்கள் இணைந்து இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமாக உருவெடுக்க முடிவு செய்துள்ளன. இரு நிறுவனங்களின் மதிப்பு இந்திய மதிப்பில் ரூ.1.5 லட்சம் கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் இரு நிறுவனங்கள் இணைந்ததும், சுமார் 43 கோடி வாடிக்கையாளர்களுடன் டெலிகாம் சந்தையின் 35% பங்குகளை பெறும்.

    இந்திய டெலிகாம் சந்தையில் ஏற்பட்டிருக்கும் பலத்த போட்டி காரணமாக இலவச வாயஸ் கால்கள் வழங்கப்படும் சூழலில் இருநிறுவனங்கள் இணைப்பின் மூலம், ஐடியா மற்றும் வோடபோன் நிறுவனங்களின் கடன் சுமையை சமாளிக்க முடியும் என கூறப்படுகிறது. இரண்டு நிறுவனங்களின் ஒன்றிணைந்த கடன் சுமை இந்திய மதிப்பில் ரூ.1.15 லட்சம் கோடி என கணக்கிடப்பட்டுள்ளது.

    ஐடியா நிறுவனம் சார்பில் தேவையான வங்கி உத்தரவாதம், வோடபோன் இந்தியா கடன்களை ஏற்றுக்கொண்டதும், இருநிறுவனங்கள் இணைப்பு அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 
    ×